Pages

Tuesday, February 19, 2013

கண்களின் பாதுகாப்பிற்கான மென்பொருள்


உங்கள் கண்களின் பாதுகாப்பிற்கான ( Eyes Relax )மென்பொருள் இதுஆகும்.இது ஒரு அருமையான மென்பொருள். நாம் கணினியில்மணிக்கணக்காக உட்கார்ந்து வேலைபார்ப்போம்.நேரம் போவதேதெரியாது .பாவம் நம் கண்கள் தான் என்ன பாவம் செய்தன.சிறிதுஇடைவெளி கூட விடமால் கொட்ட கொட்ட விழித்து வேலைசெய்வோம். இதை தவிர்க்கவே இந்த மென்பொருள் ஒரு சிறந்தபணியை மேற்கொள்கிறது .அது என்னனென்ன பணிகள் என இனிபார்ப்போம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால்செய்து கொள்ளவும்  நீங்கள் கணினியில் பணிபுரியும் போது ஒருகுறிப்பிட்ட நீங்கள் கொடுத்த நேர இடைவெளியில் இடைவேளைஏற்படுத்தி உங்கள் கண்களுக்கு சிறிது ரிலாக்ஸ் தருகிறது .அதாவதுசிறிது நேர இடைவெளியில் கணினி தனது பணியை நிறுத்தி சிலவினாடிகளில் விட்ட இடத்திலிருந்து பணியை தொடர்கிறது .1 ) உங்களுக்கு தேவையான வொர்க் டைம் ,பிரேக் டைம் கொடுக்கவும்.
2 ) பின் கான்பிகர் செட்டிங் மீது கிளிக் செய்து உங்களுக்கு தேவையானமாற்றங்களை ஏற்படுத்தவும்.
இதில் உங்களுக்கு வெறும் டயலாக் பாக்ஸில் இன்டர்வெல் தெரியவேணுமா ,அல்லது கணினி திரை முழுதும் வண்ணங்களில் மாறிஅல்லது திரையில் ஏதாவது படத்தை செட் செய்யவா,அல்லது உங்கள்படங்கள் ஸ்லைடு ஷோ ஆக இடைவெளி வேண்டுமா என தேர்வுசெய்யவும்,முடிந்த வரை கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களை தேர்வுசெய்தால் கண்கள் ரிலாக்ஸ் அடையும்.
3 )  மேலும் நீங்கள் நீண்ட நேர இடைவெளியும் செட் செய்துகொள்ளலாம்.
மேலும் நம்பர்  ( 4,5 )- ல் உள்ள செட்டிங்கையும் பயன் படுத்திபாருங்கள்.
6 ) பின் HIDE அழுத்தினால் அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்துகொள்ளும்.நீங்கள் செட்டிங் செய்த நேரம் வரும் போது எச்சரிக்கைஒலி ஏற்படுத்தி சிறப்பான பணியை புரியும்.அந்த ஒலியையும் நமக்குதகுந்த இசை ஒலியை தேர்வு செய்து கொள்ளலாம்.பயன்படுத்திஉங்கள் கருத்தை கூறுங்கள்.நான் மனதுக்கு இதமான முருகன் படத்தைசெட் செய்துள்ளேன்.பார்க்க படம்.இன்டர்வெல் தேவை இல்லையெனில் உடனே கேன்சல் மீது கிளிக்செய்தால் உடனே பணியை தொடரலாம்.இதன் தரவிறக்க முகவரி :- Click Me

0 comments:

Post a Comment